பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும் அடக்கமானவர்களே. அதையும் மீறி எழுதுவதற்கு ஒரு எழுத்தாளனுக்குச் சுதந்திரமும், நெஞ்சில் மற்றவருக்கு அஞ்சாது மிஞ்சியிருக்கும் துணிவும், சமுதாயத்தின் மேல் காதல் கொண்ட பார்வையும் வேண்டும். அந்த வகையில் இது தியாகலிங்கத்தின் மற்றுமொரு பங்களிப்பாக இருக்கும் என்பதில் பெருமைப்படலாம். அதை அங்கீகரித்து அறிந்துகொள்வது வாசகர்களாகி உங்கள் கடமையாகும்.